இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம், கீரிமலை – நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (ஜூலை 4) குறித்த ஆலயத்தில் வெள்ளிப் பொருட்கள் களவாடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, அது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் உத்தியோகப்பூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டையடுத்து, காங்கேசன்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளை முடுக்கிவிட்டனர். தீவிர விசாரணைகளின் அடிப்படையில், இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் திருடப்பட்ட வெள்ளிப் பொருட்களை மீற்பதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, அவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் பொலிஸார் தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
