நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), கொழும்பு கோட்டை காவல்துறையின் ஆதரவுடன், திங்கட்கிழமை காலி முகத்திடல் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டது.
நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபடும் வியாபாரிகளை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட வியாபாரிகள் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் கண்டறியப்பட்டனர்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறும் எவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தங்களின் முதன்மையான முன்னுரிமை என்று குறிப்பிட்ட அதிகாரசபை, இவ்வாறான முறைகேடுகளைத் தடுக்க நாடு தழுவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளது.
