2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பரீட்சைக்கான தயார்படுத்தல்களுக்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டு சில மாணவர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க மறுத்த நீதிமன்றம், அதனை முற்றாகத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், திட்டமிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் உயர்தரப் பரீட்சை உரிய காலத்தில் எந்தவித மாற்றமும் இன்றி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
