வட்டவளை அதகரவத்தை ஊடாக ஹட்டன் செல்லும் பாதையில் பாரிய மண்சரிவு லொனக் பாதையில் மதகு உடைந்து விழும் அபாயம்
நாளை அல்லது நாளை மறுதினம் சீர்செய்ப்படும்
அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் இரா.ஜீவன் இராஜேந்திரன்
வட்டவளையிலிருந்து அகரவத்தை, வெளிஓயா ஊடாக ஹட்டன் செல்லும் பாதையில் நேற்று பெய்த கடும் மழைகாரணமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது குறிப்பிட்ட இடத்தில் டித்வா காலத்திலும் மண்சரிவு ஏற்பட்டிருந்தது பொதுமக்களின் முயற்சியில் வாகனபோக்குவரத்திற்காக சிரமாதானம் மூலம் சீர்செய்தமைகுறிப்பிடத்தக்கது அதோடு வட்டவளை லொனக் பதையில் மீனாட்சி தோட்டத்திற்கருகில் மதகு ஒன்று பழுதடைந்து உடைந்துவிழும் அபாயத்திலுள்ளது
மேற்படி பாதை போக்குவரத்து செய்யமுடியாது மிக மோசமான நிலையிலுள்ளது மிகுந்து சிரமத்திற்கு மத்தியிலே பாடசாலைமாணவர்கள் நோயாளிகள் பொதுமக்கள் நலன் கருதி நான்கு தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றது இந்தநிலையில் இந்த மதகு உடைந்து போக்குவரத்து முற்றாக தடைப்பட்டால் மாணவர்கள் நோயாளர்கள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கவேண்டிவரும்
அகரவத்தையிலிருந்து லொனக்வரையான சுமார் 03km பாதையை செப்பனிட்டு தருமாறு பலவருடங்களாக பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை
இவ்விடயம் தொடர்பாக அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் இரா.ஜீவன் இராஜேந்திரன் கருத்துதெரிவிக்கையில் மதகு மற்றும் மண்சரிவு இரண்டையும் நேரில் சென்று அவதானித்ததாகும் உடனடியாக சீர்செய்ய வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்டதரப்பின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் நாளை அல்லது நாளை மறுதினம் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் சீர்செய்யப்படும் எனவும் தெரிவித்தோடு தொடர்ந்து லொனக் தோட்டப்பாதை புனரமைப்பு செய்யாமல் புறக்கணிக்கப்பட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராடுவதைதவிர வேறுவழியில்லை என்றும் குறிப்பிட்டார்.
