கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கிச் செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் போதியளவில் இயங்காததால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு பிரதான பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாகப் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள், பேருந்து சேவை இல்லாத காரணத்தினால் அங்கேயே உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன், மஸ்கெலியா உள்ளிட்ட மலைநாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் பல மணி நேரமாகக் காத்திருப்பதால், குறித்தும் பெண்கள், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிப்போர் கடும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் துறைசார் அமைச்சரும் உடனடியாகக் கவனம் செலுத்தி, கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கிய இரவு நேரப் பேருந்து சேவைகளை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸ்கர்
