டி சந்ரு
சீதை அம்மன் ஆலயத்திற்கு முன் தொடர்கதையாகும் பாதசாரிகள் கடவையில் இடம் பெறும் விபத்துகள்..
மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் இராமாயணத்துடன் தொடர்புபட்ட வரலாற்று சிறப்புமிக்க சீதாஎலிய பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ள நுவரெலியா – பதுளை பிரதான வீதியில்
வாகனங்களின் பாவனையும், போக்குவரத்து நெரிசலும் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது அதற்கு ஏற்றால்போல் ஆலயதிக்கு முன் காணப்படும் பாதசாரிகள் கடவையில் விதிமுறைகளை மீறுதலும், வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் கூட அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மட்டும் விபத்துக்குள்ளாவதில்லை, மாறாக நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகளும், பாதசாரி கடவையை முறையாக பயன்படுத்தும் அப்பாவி மக்களும் கூட விபத்தில் சிக்குகிறார்கள், சில சமயங்களில் உயிரிழக்கவும் செய்கிறார்கள். தற்போதைய நிலையில், வீதிகளில் நாம் மட்டும் விதிகளை பின்பற்றி பயணிப்பதால் மாத்திரம் விபத்துக்களை தடுத்துவிட முடியாது என்கிற நிலை உருவாகிவிட்டது.
இறுதியாக வெள்ளிக்கிழமை (11) மாலை வரலாற்று சிறப்புமிக்க சீதாஎலிய பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக காணப்படும் பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற ஒருவர் மீது முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் பலத்த காயம் அடைந்துள்ளார் எனினும் முச்சக்கர வண்டி சாரதி கண்டுகொள்ளாமல் சென்று விட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
குறித்த ஆலயத்திற்கு முன்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும் அது போலவே வீதி விபத்துகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது எனவே நுவரெலியா வீதி போக்குவரத்து பொலிசாரும், வீதிகள் தொடர்பான அமைச்சும் இது தொடர்பில் அதீத கவனத்தை செலுத்தி இது தொடர்பிலான நடைமுறைக்கு பொருத்தமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றன.
