பெல்மடுல்ல மற்றும் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றங்களில் கடமையாற்றிய பெண் சட்டத்தரணி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெல்மடுல்ல பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சட்டத்தரணி துஷ்மந்தி அபேநாயக்க (40), பெல்மடுல்ல புலத்வெல்கொடவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை வீட்டுப் பணிப்பெண் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் இருந்த படுக்கையில் சட்டத்தரணி இறந்து கிடந்ததைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டுப் பணிப்பெண் காலையில் அந்த வீட்டிற்கு வந்து வீட்டைச் சுத்தம் செய்து, உணவு தயாரித்து மாலையில் திரும்புவார்.
பணிப்பெண் வழக்கம் போல் நேற்றுக் காலை வீட்டிற்கு வந்தபோது, படுக்கையில் சட்டத்தரணியின் சடலம் காணப்பட்டது. அவரது கணவர் வீட்டில் இல்லை என பணிப்பெண் போலீசாரிடம் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை இரவு சட்டத்தரணிக்கும், கணவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது கணவர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தென்கொரியாவில் இருந்து திரும்பிய சட்டத்தரணியின் கணவர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்.சம்பந்தப்பட்ட சட்டத்தரணி ஏற்கனவே திருமணம் செய்திருந்ததாகவும் ஆனால் அவருக்கு இரண்டு திருமணங்களிலும் குழந்தைகள் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது கணவர் கிராமத்தில் உள்ள இறுதிச் சடங்குகளில் நேரத்தை செலவிடும் ஒரு சமூக நபர் என்றும், அவர் வழக்கமாக இரவு தாமதமாக வீட்டிற்கு வருவா. இதனால் சட்டத்தரணி மகிழ்ச்சியடையவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் இருந்து வந்திருந்த உறவினர் ஒருவரின் அழைப்பின் பேரில் வியாழன் (30) இரவு விருந்தில் இருவரும் கலந்து கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.வியாழன் (30) இரவு வீடு திரும்பிய இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பெல்மடுல்ல நீதவான் சட்டத்தரணியின் வீட்டுக்குச் சென்று நேற்று (31) சோதனை மேற்கொண்டார். இதன்போது அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நீதவானிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வியாழன் இரவு பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அனுப்பிய எஸ்எம்எஸ் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தியில் வியாழன் இரவு அவர் எப்படி தாக்கப்பட்டார் என்பதை விளக்கியிருந்தது.
சடலம் நேற்று (31) பிரேத பரிசோதனைக்காக பெல்மடுல்ல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட வைத்திய நிபுணர் மரணம் தொடர்பாக வெளிப்படையான தீர்ப்பை வழங்கியதுடன், அவரது மரணத்திற்கான காரணத்தை அறிய முழுமையான அறிக்கைக்காக உடல் உறுப்புகள் அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
