இலங்கையைச் சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பாவுக்கு விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் மலேசிய தம்பதியைரைக் அந்நாட்டு குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கைதுசெய்துள்ளனர் என, அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தடுக் ருஸ்லின் தெரிவித்துள்ளார்.
குறித்த தம்பதி 30,000 தொடக்கம் 50,000 யூரோக்களை ஒரு சிறுவருக்காக வசூலித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டினை தயாரிப்பதற்காக, 12 வயதுக்கு குறைவான வயதையுடைய மலேசிய சிறுவர்களின் பெற்றோரை மலேசிய குடிவரவு- குடியகல்வு திணைக்களத்துக்கு வருகைத் தருமாறு அழைத்து, அங்கு அவர்களின் பிள்ளைகளுக்குப் பதிலாக இலங்கைச் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் கைரேகையினைப் பயன்படுத்தி இலங்கைச் சிறுவர்களை கடத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய இந்த மாதம் 12ஆம் திகதி கோலாலாம்பூரிலுள்ள குடிவரவு- குடிகல்வு திணைக்களத்துக்கு சிறுவனொருவனுடன் வருகைத் தந்த தம்பதியினரிடம் அதிகாரிகள் விசாரித்த போது, இவர்களுடன் இருந்த சிறுவன் மலேசிய மொழியைப் பேச முடியாமல் திணறியதை அடுத்தே சந்தேகநபர்களை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் 26 மற்றும் 37 வயதானவர்கள் என்றும் மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்களால் இதுவரை எத்தனை சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் இதனுடன் தொடர்படையவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
