ம.மா.ஹவ.என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் பாடசாலையின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தினை இன்று படைத்துள்ளது.

மாணவர்களின் காலத்துக்கேற்ற தேவையறிந்து நாடாத்திய ” ஒழுக்க தலைமைத்துவ தொழில்வாய்ப்பு வழிகாட்டல் செயலமர்வு” மிகவும் காத்திராமான திட்டமிடலாகவும் அமைந்திருந்தது.


கல்லூரியின் அதிபர் திரு இராதாகிருஸ்ணன்
அவர்களின் தலைமையில் பழையமாணவர் சங்க செயலாளர், உறுப்பினர்கள்,
ஆசிரியர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் 300 மாணவர்கள் பங்குகொண்டனர்.


இரு அமர்வுகளாக இடம்பெற்ற செயலமர்வில் முதலாவது அமர்வில் மாணவர்களின் ஒழுக்கமும் ஆளுமையும் என்ற விடயம் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இடம்பெற்றது.


அதனைதொடர்ந்து மாணவர்களுக்கான தலைமைத்துவம் என்ற தொனிப்பொருளில் மாணவர்தலைவர்கள் உள்ளடங்கலாக 100ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர்.

இவ்செயலமர்வு அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

வளவாளராக Mr.Sribavan Balasingam
M.A (Dev.Stu.),Dip.in CG., B.A(Hons).
Career Counselling Consultant & Trainer,
Master Trainer of Soft Skill.கலந்து கொண்டு மிகவும் ஆரோக்கியமானதொரு பணியையாற்றியிருந்தார்.

இந்நிகழ்வு முழுமையான வெற்றியை பெற்றிருந்தது. மாணவர்களின் மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை இன்றைய நாள் ஏற்படுத்தியிருந்தது.

மிகப்பெரிய வெற்றியினை இன்றைய நிகழ்வினூடாக பழையமாணவர் சங்கம் பெற்றிருக்கின்றது.
புதியதொரு அத்தியாயத்தினூடாக பாடசாலை மாணவர்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்றஆத்மதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிகழ்வினை மிகவும் சிறப்பாக ஒழுக்குபடுத்தி தந்த அதிபர்,ஆசிரிய பெருந்தகைகளுக்கு மனநிறைவான நன்றிகள்.

இந்நிகழ்விற்கு முழுமையான அனுசரனையினை நல்கியிருந்த பழைய மாணவர் திரு.சத்தியராஜ் அவர்களின் பங்களிப்பு அனைவருக்கும் முன்மாதிரி. அவர்களுக்கும் நன்றிகலந்த வாழ்த்துக்கள்.
ஆதரவினை தந்த பழையமாணவர் சங்க செயலாளர், பொருளாளர்,உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
ஆத்மார்த்தமான ஒரு செயற்பாட்டினை பழையமாணவர் சங்கம் ஆற்றிருக்கின்றது என்ற ஆத்மார்த்தமான நிறைவோடு இந்நிகழ்வு வெற்றிபெற்றுள்ளது.

கல்விக்குழு தலைவர் என்ற வகையில் அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

தாய் பாடசாலைக்கு எம்மாலான சேவையினை வழங்கியுள்ளோம்.
“வாழிய வாழியவே வளர் என்பீல்ட் தமிழன்னை”
சிவப்பிரகாசம் கருணைநாயகன்
ஊடகப்பிரிவு
பழைய மாணவர் சங்கம்
