ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொறான பகுதியில் 55 வயதுடைய நபர் ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் மொறான நீர் வடிகானுககு அருகில் அமைந்துள்ள அணைக்கட்டு பகுதியில் நின்று கொண்டு இருந்த வேளையிலேயே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் லிஹினியாகம , மொறான, யல்வெல மஹியங்கனை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா
