தோட்டப்புறங்களது விருத்தி இன்றைய காலத்திலும் மக்களுக்கு ஒரு நிம்மதியற்ற நிலையை காட்டுகிறது என்றால் அதற்கு இடமில்லை என சொல்ல முடியாது. அப்படியான ஒரு தோட்டம் தான் கெல்சி அருகாமையில் உள்ள தங்கக்கலை 03 இலக்க தோட்டம்.

மெராயா நகரிலிருந்து செல்லக்கூடிய இத்தோட்டத்திற்கு முறையான பாதை வசதிகள் இல்லை தோட்டத்திற்கு செல்ல 1500 ரூபாவுக்கு மேல் முச்சக்கரவண்டிக்கு மாத்திரம் செலவிட வேண்டியுள்ளது.

தவிர சுமார் 120 மேற்பட்ட குடும்பங்கள் வாழும் நிலையில் சிறந்த விவசாயத்தை மக்கள் மேலதிக பொருளாதார மேம்படுத்தும் வேலையாக செய்து வருகிறார்கள். ஆக இப்பகுதி மக்களின் பிரதான பெரும் பிரச்சினை 2 கிலோமீற்ர் தூரம் கொண்ட பழுதடைந்த பாதையாகும். இரண்டு பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பல மக்கள் கெல்சி, மகஎலியா முதலிய பகுதிகளுக்கு செல்லும் இலகு பாதையாக இது அமைகிறது.

தோட்டத்துக்கு விடியாத சாபமாக இருக்கும் இப்பிரச்சினைக்கு அவ்வப்போது மாறும் அரசாங்கத்தை மக்கள் எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து கடத்தப்பட்ட காலமும், வாக்குறுதிகளும் ஏராளம் என்கின்றனர் மக்கள்.இப்படியான சூழலில் இம்மக்களின் பிரச்சினை வெளிக்கொணரப்பட்டுள்ளது.
https://fb.watch/kUfpCdQFn1/?mibextid=Nif5oz
இதற்கான தீர்வு பலரின் வாக்குறுதிகள் அப்படியே தூசிப்படிந்து போயுள்ள நிலையில் பாதை அமைத்து தரப்பட வேண்டியதன் அவசியத்தை பொறுப்புள்ள பலரும் நிறைவேற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
– சரத்
