அளவீட்டு அலகு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகளினால் எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம் கொஸ்லந்த, ஹல்துமுல்ல ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை நகரை அண்மித்த பகுதிகளில் நடாத்தப்பட்டது.

பண்டாரவளை மரக்கறி மொத்த சந்தையின் மூன்று வியாபாரிகள் பயன்படுத்திய சுமார் 225 கடைகளின் எடை மற்றும் அளவிடும் கருவிகள் சோதனையிடப்பட்டு மூன்று போலி தராசுகள் கைப்பற்றப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த பன்னிரெண்டு மாதங்களில், சீல் வைக்க தவறிய 18 வியாபாரிகளுக்கு எச்சரிக்கப்பட்டு, தராசுகளை சீல் வைக்க அவகாசம் அளிக்கப்பட்டது.
பதுளை மாவட்ட சுனில் அபேகோனின் செயளாலர் ஆலோசனையின் பேரில்
இந்த ஆய்வுகளை உதவி அளவீட்டு அலகு தரநிலை சேவை அத்தியட்சகர் துலித் அசோக, அளவீட்டு சேவை பரிசோதகர்கள் எம்.ஐ.பிரேசர, தரிந்து அபேசிறிவர்தன மற்றும் அளவீட்டு நியம உதவியாளர் வசந்தகுமார, இஷங்க அனுருத்த ஆகியோர் மேற்கொண்டனர்.
