இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு செயலமர்வு மற்றும் அறநெறி நூல் விநியோகம் என்பன கொட்டகலை வூட்டன்ஹுல்ஸ் தேவஸ்தானத்தின் அறநெறி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிற மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் கல்வியியளாளர்கள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி 200ற்கும் மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகளுடைய ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் நுவரெலியா மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இக் கருத்தரங்கினை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தமை மிக வரவேற்கதக்க விடயமாகும்.
செய்தி – கருணைநாயகன்








