பசறை பகுதிகளைச் சேர்ந்த
அம்மணிவத்தை சிறி கதிர்வேலாயுத ஆலயத்தின் 3 இரதங்களும் பசறை சிறி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் 2 இரதங்களும்
எல்டப் லோவர் டிவிஷன் சிறி கதிர்வேலாயுத ஆலயத்தின் ஒரு ரதமும் , மற்றும்
எல்டப் கல்போக் ஆலயத்தின் ஒரு இரதமும்
டெமேரியா மாத்தன்ன ஆலயத்தின் ஒரு இரதமும்
கோணக்கலை லோவர் டிவிஷன் ஆலயத்தின் ஒரு இரதமுமாக பசறை நகருக்கு
அலங்கரிக்கப்பட்ட இரதங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் எம்பெருமான் இரத பவணியாக பசறை நகரை வலம் வந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இவ் இரத பவணிக்கு பதுளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் துலிப் த சில்வாவின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M. பியரட்ணவின் வழிகாட்டலில் பெருந்திரளான பொலிஸ் உத்தியோகத்தர்கள் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
ராமு தனராஜா
படங்கள் 👇




