பது/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தின் “கலைச்சுடர்” விருது வழங்கும் விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் V.நிரோஷன் தலைமையில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இவ்விருது வழங்கல் விழாவிற்கு சிறப்பு அதிதிகளான கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு M.G.ஜெயதிஸ்ஸ வலய கல்வி காரியாலய உதவி கல்வி பணிப்பாளர் திருமதி கவிதாஞ்சலி அம்மையார் மற்றும் கௌரவ அதிதியான பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி R.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விருது வழங்கல் விழாவில் இப்பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக் கழகங்களுக்கும், கல்வியியல் கல்லூரிகளுக்கும் சென்ற உயர்தர மாணவர்களை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் விழா நடைபெற்றது.
பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழாவுக்கு முழுமையான அனுசரணை வழங்கிய வர்த்தகர் விஜயகுமார் அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை பாடசாலையின் அதிபர் தெரிவித்துக் கொண்டமை குறிப்படத்தக்கது.
ராமு தனராஜா










