இன்றைய தினம் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கல்வி நிலையத்தின் உதவி பணிப்பாளர் நாயகம் கே.ஜி.தரங்க தில்ருக்ஷி அவர்களின் ஏற்பாட்டில் பொகவந்தலாவ நகரின் பிரபலமான பாடசாலையான சென்மேரிஸ் தேசிய கல்லூரியில் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் மற்றும் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் எனும் விசேட வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் பொகவான கில்லார்னி தமிழ் வித்தியாலய மாணவர்களும் சென்மேரிஸ் தேசிய கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கிய பாடசாலையின் அதிபர் ,பிரதி அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் மரமார்ந்த நன்றிகள்.
மேலும் இந்த நிகழ்விற்கு மலையகம்.lk ஊடக அனுசரணை வழங்கியது.





