மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.03.08.2023.
ஹட்டன் நோட்டன் நகருக்கு அருகில் உள்ள எபடின் பகுதியில் புதிதாக மதுபான கடை அமைக்க 14 நாட்கள் அவகாசம் கொடுத்து மக்கள் தீர்மானம் பெற்று கொள்ள திகதி இடம் பெறாத கடிதம் ஒன்றை அம்பகமுவ பிரதேச செயலாளர் ஊடாக ஒட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறு மக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டுள்ள கடிதம் திகதி இல்லாமை சம்பந்தமாக மக்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அம்பகமுவ பிரதேச செயலாளருக்கு அறிவித்தது உள்ளனர்.
இது காலால் திணைக்களத்தின் ஒரு தந்திரமான செயலாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.
தற்போது நோட்டன் நகரில் ஒரு மதுபான சாலை உள்ளது எனவும், மேலும் ஒரு மதுபானசாலை வேண்டாம் எனவும் இது அப் பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களையும் கிராம மக்களையும் இலக்கு வைத்து ஆரம்பிக்க பட உள்ளது என அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட பிரதேச செயலக உயர் அதிகாரி ஒருவரிடம் திகதி இல்லாமல் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது சம்பந்தமாக கேட்ட போது அவர் கூறுகையில் தமக்கு இது குறித்து புகார் கடிதம் பல வந்து உள்ளது எனவும் திகதி இடம்பெற்ற கடிதம் கிராம உத்தியோகத்தர் ஒருவர் வெகு விரைவில் ஒட்டுவார் அதனைத் தொடர்ந்து அப் பகுதியில் உள்ள மக்கள் தங்களின் எதிர்ப்பை கடிதம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறினார்.

