கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இர. சிவலிங்கம் அவர்களின் இருபத்து நான்காம் நினைவுப் பேருரை அமைப்பின் தலைவர் எம். வாமதேவன் அவர்களின் தலைமையில் 05.08.2023 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்வில் மலையகத்தின் மூத்த கல்விமான்கள், எழுத்தாளர்கள், சட்டத்தரணிகள் ஆசிரியர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் மலையகம் 200 கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற ஆறு பேர் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.
குறித்த நினைவுப் பேருரையாளர் கலாநிதி.பெ. சரவணக்குமார் அவர்கள் பற்றிய அறிமுகத்தை கலாநிதி. எஸ். கருணாகரன் அவர்கள் வழங்க, கலாநிதி.பெ. சரவணக்குமார் அவர்கள் மலையகச் சமூக உருவாக்கத்தில் கோ. நடேசய்யரும் அவரது அறியப்படாத எழுத்துக்களும் எனும் தலைப்பில் இர. சிவலிங்கம் அவர்களின் இருபத்து நான்காம் நினைவுப் பேருரை நிகழ்த்தனர். நிகழ்வில் ,இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின் தலைவர் எம். வாமதேவன் அவர்களும் உறுப்பினர் பேராசிரியர் தை. தனராஜ் ஐயா அவர்களும் பேருரையாளரை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் .


