இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கின்ற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. அந்த வகையில் 200 வருடங்கள் கடந்தும் இன்னமும் மாறாத வடுக்களை சுமந்து கொண்டிருக்கும் இந்த மக்களின் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கும் கலந்துரையாடலும் கடந்த 11ம் திகதி மற்றும் 13ம் திகதிகளில் கொட்டக்கலை கொமர்சியல் பகுதியில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் ரைட் டு லைப் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பிலிப் திஸ்ஸாநாயக்க, ஊவாசக்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுரேஷ், ஹட்டன் வலைய கல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் சந்திரலேகா கிங்ஸிலி, சட்டத்தரணி துலான் திசாநாயக்க மற்றும் சுய சக்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் பங்குபற்றிய தோடு வளவாளர்களாகவும் இணைந்தனர்.
2024க்கு ஒன்றினைவோம் இன்னும் மகுட வாசகத்தின் கீழ் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மலையக மக்களினுடைய சமகால பிரச்சனைகள் குறித்து ஆழமாக கலந்துரையாடப்பட்டதுடன் பெண்களுக்கு இருக்கக் கூடிய முக்கிய பொறுப்புகள் மற்றும் சமூகத்தில் அவர்கள் இயங்க வேண்டியது அவசியம் குறித்து இந்த அமர்வில் பேசப்பட்டது அது மட்டுமல்லாமல் 50க்கும் அதிகமானோர்கள் பங்கு பற்றி இருந்தனர் அவர்கள் தங்களுடைய சந்தேகங்களையும் பிரச்சனைகளையும் முன் வைத்ததுடன் அதற்கு எவ்வாறான வழிமுறைகளில் தீர்வை பெற்றுக் கொள்லலாம் என்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டது.
-ரா.கவிஷான்-
