பாடசாலைகளுக்கிடையிளான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் வலய மட்டத்தில் வெற்றிபெற்ற இராகலை உயர் பாடசாலை அணி அண்மையில் மாத்தளை நகரில் இடம்பெற்ற மாகாண மட்ட போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிக்காட்டி கலந்துகொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றிக்கொண்டு சாம்பியன் பட்டத்தினை வென்றதோடு தேசிய மட்டத்திற்கும் தெரிவாகி பெருமை சேர்த்துள்ளது .
வெற்றிபெற்ற பாடசாலை அணிக்கும் வழிநடாத்திய அதிபர் ஆசிரியர்களுக்கும் தேசிய மட்டத்திலும் வெற்றிபெற வாழ்த்துக்களைபழையமாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இம்முறை இப்போட்டிகளில் கலந்துகொண்ட எமது அணியின் உத்தியோகபூர்வ tshirt களுக்கான அனுசரணையினை எமது பழைய மாணவர் சங்கம் ஏற்றிருந்தது. தேசிய மட்ட போட்டிகளுக்கான தயார்படுத்தல் மற்றும் பங்குபற்றலுக்கான ஒத்துழைப்புகளை நல்குவதற்கும் ஆவலோடு காத்திருக்கிறோம் எனவும் பாடசாலையின் பழையமாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலை வரலாற்றில் கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளதோடு இரண்டு முறை மாகாண மட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2011 – Champions
2015 – Runners up
2023 – Champions
அண்மையில் கரப்பந்தாட்ட அணியும் தேசிய மட்டத்திற்கு தெரிவான நிலையில் கல்வியோடு பல துறைகளிலும் சிறந்து விளங்கும் இராகலை உயர் பாடசாலையை சிறப்புற நிர்வகிக்கும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பல்வேறு திறமைகளுடன் திகழும் இராகலை உயர் பாடசாலைமாணவர்களால் கடின பந்து (hard ball) கிரிக்கெட்டின் அவசியமும் தற்போது உணர்த்தப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் ஒன்றிணைந்து வழி செய்வோம். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
#RAGALA
#rhsppa

