அனுராதபுரம் – விலாச்சி வீதியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்துக்கு அருகில் இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 36 வயதுடைய பெண்ணும் அவரது 9 வயது மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
