Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

August 5, 2026

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

August 5, 2026

நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

August 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நவீன உலகிற்கு ஏற்றவாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டுடன் பாடசாலைகளின் அபிவிருத்தி ஆரம்பமாகின்றது
இலங்கை

நவீன உலகிற்கு ஏற்றவாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டுடன் பாடசாலைகளின் அபிவிருத்தி ஆரம்பமாகின்றது

ThanaBy ThanaAugust 27, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
நவீன உலகிற்கு ஏற்றவாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டுடன் பாடசாலைகளின் அபிவிருத்தி ஆரம்பமாகின்றது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை கல்வி வலயத்தில் உள்ள 34 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த முன்னோடித் திட்டத்துக்கான அனுமதியை மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்கவிடம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மினுவாங்கொடை வலயக் கல்வி அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற மினுவாங்கொடை கல்விக் கட்டமைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.
மினுவாங்கொடை கல்வி வலயத்தில் தற்போது பாழடைந்த நிலையில் உள்ள பாடசாலை கட்டிடங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
மினுவாங்கொடை கல்வி வலயத்தில் 160 பாடசாலைகள் உள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட 34 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னோடித் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்கான அனைத்து திட்டங்களும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பட்டயப் பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்களின் மூலம் தயாரிக்கப்படும்.
பாடசாலை அபிவிருத்திக்கான ஆரம்பத் திட்டம் தனியாரால் மேற்கொள்ளப்படுமாயின் அதற்காக 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவிட நேரிடும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கோ அல்லது வலயக் கல்வி அலுவலகங்களுக்கோ இவ்வளவு பெரிய தொகையை சுமப்பது கடினம் என்பதால், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பட்டய பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களை தொடர்பு கொண்டு பாடசாலைகளின் அபிவிருத்திக்கான அடிப்படைத் திட்டங்களை தயாரிக்குமாறும் அவர் குறிப்பிட்டார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திட்டம் தொடர்பில் பாடசாலை அபிவிருத்திக் குழு, ஆதிசிஷ்ட சங்கம், பாடசாலை முகாமைத்துவக் குழு என்பனவற்றுடன் கலந்தாலோசித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிபர்களுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.
அந்த திருத்தங்களை உள்ளடக்கி அடுத்த மாதம் அடிப்படை திட்டம் தயாரிக்கப்பட்டு முடிக்கப்படும் என்றார்.
இந்தத் திட்டங்களின் அடிப்படையிலேயே பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி அமைய வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர்களுக்கு வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன, மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் கபில ரணராஜா பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி உள்ளிட்ட அதிகாரிகள், மினுவாங்கொடை பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    ருமேஷ் தரங்கவின் சாதனையை பாராளுமன்றத்தில் பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

    August 5, 2026
    Editors Picks

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.