Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

August 16, 2026

கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

August 16, 2026

அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

August 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலைப் பத்தாண்டு’க்காக ஒதுக்கப்பட்ட 10,000 மில்லியன் ரூபாவில் 9410 மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டங்களுக்காக மாவட்டச் செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது…
இலங்கை

மலைப் பத்தாண்டு’க்காக ஒதுக்கப்பட்ட 10,000 மில்லியன் ரூபாவில் 9410 மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டங்களுக்காக மாவட்டச் செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது…

ThanaBy ThanaMay 28, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலைப் பத்தாண்டு விசேட ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்திற்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட 10,000 மில்லியன் ரூபாவில் 9410 மில்லியன் ரூபா அபிவிருத்தி திட்டங்களுக்காக மாவட்ட செயலாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதன் கீழ், செயல்பாட்டு திட்டங்களின் எண்ணிக்கை 13612 ஆகும். இந்த வேலைத்திட்டங்களை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் இந்தத் திட்டங்களின் முன்னேற்றத்தைப் பின்தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரேரணையின் பிரகாரம், மலையகப் பத்தாண்டு பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 10,000 மில்லியன் ரூபாவாகும். கண்டி, மாத்தளை, நுவரெலியா, களுத்துறை, காலி, மாத்தறை, பதுளை, குருநாகல், இரத்தினபுரி. கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 97 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. வீடமைப்பு, உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி போன்ற 10 பகுதிகளின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு, சந்தை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 1032 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கல்விக்காக 1152 திட்டங்களும், குடிநீர் வசதிக்காக 676 திட்டங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளன. மொத்த திட்டங்களில், 8140 திட்டங்கள் அணுகு சாலை வசதிகளை மேம்படுத்த செயல்படுத்தப்படுகின்றன. விவசாயம் மற்றும் சிறு நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 780 திட்டங்களும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திக்கான 271 திட்டங்களும், தொலைபேசி மற்றும் இணைய வசதிகளை மேம்படுத்துவதற்கான 13 திட்டங்களும் செயற்பட்டு வருகின்றன. சுகாதாரம் மற்றும் சுகாதார ஆரோக்கிய வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 516 ஆகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவத்துக்காக 88 திட்டங்களும், வீட்டு வசதிகளை மேம்படுத்த 944 திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மலைப் பத்தாண்டு 10 சிறப்பு ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கண்டி மாவட்டத்தில் அதிகளவான திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. அந்த திட்டங்களின் எண்ணிக்கை 3146 ஆகும். கேகாலை மாவட்டத்தில் 2544 திட்டங்களும், பதுளையில் 2208 திட்டங்களும், இரத்தினபுரியில் 1813 திட்டங்களும், மாத்தறையில் 1403 திட்டங்களும், மாத்தளையில் 667 திட்டங்களும் செயற்படுத்தப்படவுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கை 637, காலி மாவட்டத்தில் 534 திட்டங்கள், குருநாகலில் 515 திட்டங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 132 திட்டங்கள் என அமைச்சர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் 13 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தின் மிகக் குறைந்த அபிவிருத்தி முன்மொழிவுகள் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கு, கடல் மட்டத்திலிருந்து 150 மீட்டருக்கு மேல் உள்ள மலைப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அதன் கீழ், அம்பாறை மாவட்டத்தில் ஒரு கிராம சேவகப் பிரிவு மாத்திரமே உள்ளடங்கியிருப்பதன் காரணமாகவே மிகக் குறைந்தளவு அபிவிருத்தி முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

முனீரா அபூபக்கர்
2024.05.28

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026
    Editors Picks

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.