Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

August 16, 2026

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

August 16, 2026

கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

August 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மடு தேவாலயத்தை இடையூறின்றி வழிபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்
இலங்கை

மடு தேவாலயத்தை இடையூறின்றி வழிபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்

ThanaBy ThanaJune 17, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மன்னார் – மடு ​தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவாற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மடு மற்றும் சிவனொலிபாத மலை போன்ற புனித தளங்களுக்கான நுழைவு வீதிகள் அவற்றை வழிப்பட வருவோருக்காகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்து தண்டப்பணம் அறவிடுவது நியாமற்றதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மடு தேவாலயத்தில் வழிபாட்டுக்காக வருவோர் கைது செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக அது குறித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவிக்கும்படியும் ஜனாதிபதி இதன்போது அறிவித்தார்.

மன்னார் மாவட்டச் செலயகத்தில் நேற்று (16) நடைபெற்ற விசேட மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மடு தேவாலயத்தை வழிபட வருவோருக்காக தேவாலய நுழைவு வீதியின் இரு புறங்களையும் தூய்மைப்படுத்தி அபிவிருத்தி பணிகளை செய்யுமாறு இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி, அந்த பணிகளுக்காக மன்னார் மறை மாவட்ட ஆயரின் பிரதிநிதி ஒருவர், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் பொலிஸாரை தொடர்பு படுத்திக்கொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.

எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கும் மடு தேவாலயத்தின் உற்சவத்திற்கு முன்னதாக தூய்மைப்படுத்தல் பணிகளை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மன்னாரின் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான விசேட மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மாவட்ட சுகாதார,கல்வி,நீர்ப்பாசனம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காணப்படும் பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதியிடம் நேரடியாகச் சுட்டிக்காட்டப்பட்டதோடு, அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் ஜனாதிபதி அவ்வப்போதே வலியுறுத்தினார்.

அதேபோல் மன்னார் வைத்தியசாலையில் குறைப்பாடாக காணப்படும் CT ஸ்கேன் இயந்திரத்தை பெற்றுத்தருமாறு வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனமெடுத்து விரைவில் அதனை பெற்றுத்தருவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

மேலும் மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்காமல் போன் அபிவிருத்தியை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் இவ்வருடத்திலேயே ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

எதிர்வரும் ஐந்து தசாப்தங்களில் ஏற்படப்போகும் காலநிலை மாற்றங்களுக்கான தீர்வுகளை முன்கூட்டியே இலங்கை அறிந்துகொள்ள வேண்டியிருப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அடுத்த ஐம்பது வருட காலத்திற்கு உலர் வலயத்திற்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் அதேநேரம் வெப்ப வலயங்களுக்குள் மழைவீழ்ச்சி பதிவாகாத நிலைமை ஏற்படக்கூடுமென கணிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், மாற்றம் கண்டுவரும் உலகத்தின் நகர்வுகளுக்கமைய பொருளாதார, சமூக, கல்வி மற்றும் விவசாய துறையாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026
    Editors Picks

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.