யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் கோரிக்கைக்கு அமைவாக மருதங்கேணி, கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தினரால் தெரிவு செய்யப்பட்ட, 12 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் தலைவர் கு.மகாலிங்கம் தலமையில் 16.06.2024 பிற்பகல் இடம்பெற்றது.
கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கு, புத்தகப் பைகளுக்கான நிதி பங்களிப்பு செய்த புலம்பெயர் உறவான ப. தேவநாயகம், மற்றும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் தலைவர் கு.மகாலிங்கம் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
அனைத்து மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை குடத்தனை இளைஞர் ஒன்றியத்தினரால் வழங்கப்பட்டிருந்தது.
ஒவ்வொருவருக்கும் ரூபா 3500/- பெறுமதியான புத்கப்பை, அப்பியாசக் கொப்பி என்பன வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், நிதிக்கொடையாளர்கள், யாழ் வடமராட்சி ஊடக இல்ல உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






