Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

August 16, 2026

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

August 16, 2026

கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

August 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்படாது
இலங்கை

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்படாது

ThanaBy ThanaJune 27, 2024No Comments7 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்படாது என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலில் அரசியலமைப்பு ரீதியிலான ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்திரமற்ற நிலையில் இருந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதியால் ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாகவும் அதனால் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற விவாதம் நாட்டில் நிலவி வருகிறது. அத்துடன், பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது குறித்தும் கலந்துரையாடப்படுகிறது.

ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதை முதலில் கூற வேண்டும். அரசியலமைப்பு ரீதியாக தேவையானது ஜனாதிபதி தேர்தல். நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் போது, அது நேரடியாக மக்களை பாதிக்கிறது. எனவே இந்த நாட்டுக்கு நிலையான அரசாங்கம் தேவை.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலை நடத்தலாம். அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்பட்டு தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் 2022 ஆம் ஆண்டு மே மாதம் இந்த நாட்டில் இருந்த நிலைமையை நாம் அனைவரும் புரிந்து கொண்டோம். மக்கள் வீதிகளில் எரிபொருள் வரிசை மற்றும் எரிவாயு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் போனது. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையால் எங்களுக்கு ஏற்பட்ட வெளிநாட்டு நிதி பிரச்சினைகளால் நாங்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மட்டுமே சவாலை ஏற்றுக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் சிறு குழுவாக நாங்கள் உதவி செய்தோம். அனுபவத்துடனும், முதிர்ச்சியுடனும், சவால்களை ஏற்கும் திறமையுடனும் அந்த வேலையைச் செய்வார் என்று நாங்கள் நம்பினோம்.

இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது, நாம் எதிர்பார்த்ததைச் செய்திருக்கிறார். இப்போது ரணில்தான் ஆள் என்ற கருத்து கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படியானால், அன்று நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறோம்.

நாட்டுக்கு நல்ல செய்தியைக் கூறும்போது, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையுள்ள மனிதனும் நல்லதைக் காண்கிறான். அதை நாங்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னொரு கூட்டத்தினர் நல்ல செய்தி சொன்னால் அதை பாசாங்குத்தனத்துடன் பார்க்கிறார்கள்.

இந்த போஸ்ட்டர் மூலம், நாட்டை நேசிக்கும் மக்களுக்கும், இந்த நாட்டை அழிக்க நினைக்கும் மக்களுக்கும் இடையிலான பிரிவினையை நாம் தெளிவாகக் காண்கிறோம்.

சில எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணியைப் போல ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் தலைவர்கள் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், நாடு நன்றாக இருக்கும் நேரங்களில் எப்போதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2023 மார்ச்சில் IMF ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முதல் தவணையை பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இது போன்ற வேலைநிறுத்த அலைகளை ஏற்படுத்தியது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கிய நேரத்தில், கோவிட் தொற்றுநோய் காரணமாக நாட்டை மூட வேண்டியிருந்தது. நாட்டை திறந்துவிட்டு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியதும் தொழிற்சங்கத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து அவர்களை வரவிடாமல் தடுத்தனர். இன்று ஒரு நல்ல செய்தி வரவிருக்கும் நேரமும் இவ்வாறு செய்கின்றனர்.

அதை அழித்து வேறாக மாற்ற வேண்டும் என்று இன்று வேலை நிறுத்த அலை நடத்தப்படுகிறது. கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் அரச ஊழியர்கள் சில சிரமங்களுக்குள்ளாகியிருந்ததாக நான் நம்புகிறேன். ஆனால் கோவிட் தொற்றுநோய்களின் போது நம் நாட்டின் தனியார் துறை கூட சரிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊழியர்களின் சம்பளம் கூட குறைக்கப்பட்டது. ஆனால் அரசு அதைச் செய்யவில்லை. அரசு அரச ஊழியர்களை முடிந்தவரை பாதுகாத்தது. அதனைச் செய்த அரச அதிகாரிகள், தமது சம்பளத்தை இப்போதாவது அதிகரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், இந்த சம்பளப் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி குழுவிருக்கும் போது, அந்தக் குழுவின் ஊடாக தமக்கு சாதகமான பதில் கிடைக்கும் எனத் தெரிந்தும், தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களைச் செய்கிறார்கள். அவர்களின் வேலையினால் தான் நாங்கள் இவ்வாறான ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள். இந்த சம்பள முரண்பாட்டை ஜனவரி 2025 க்குள் தீர்க்க ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளோம். தருகிறோம் என்று சொன்னாலும், பிரான்ஸ் மாநாட்டின் மூலம் நம் நாட்டிற்கு கிடைக்கும் சலுகையை குறைத்து, அரச சேவையை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் போது, இந்த நாட்டை அராஜகமாக்கி, மீண்டும் சீரழிக்க இவர்கள் எல்லாம் செய்கிறார்கள். பொருளாதார ரீதியாக அவர்களின் நிகழ்ச்சி நிரலை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எனவே, இதனை இந்நாட்டு மக்கள் புத்திசாலித்தனமாகப் பார்ப்பார்கள் என நான் நம்புகிறேன்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்ததாவது.

நாட்டுக்கு நல்லதே நடக்கும் என்ற தகவலை பார்த்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் மண்ணெண்ணெய் பட்ட சாரை பாம்பைப் போல் குழப்பம் அடைகின்றனர்.தங்களால் இயன்றதை எல்லாம் செய்கிறோம் என்று காட்டும் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகள் எப்போதும் கபட அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால்தான் நாட்டிற்கு ஒரு நற் செய்தி தகவலால் என்ற செய்தியால் மிகவும் வருத்தப்படுகிறார்கள்.

நாட்டுக்கு நல்ல செய்திகள் வரும் என்பது மக்களுக்கு சுப நாள் உதயமாகும் என்பதாகும். நாட்டு மக்களுக்கு நல்ல காலைப் பொழுது விடிவதை விரும்பாதவர்கள் யார் என்பது இந்த இரண்டு மூன்று நாட்களில் உறுதியாகும்.

கொரியா இப்படி பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது அந்நாட்டு மக்கள் நாட்டை மீட்க அரசுக்கு ஆதரவளித்தனர். இஸ்ரேல் மக்கள் நெதன்யாகுவை ஆதரித்து நிலையான ஆட்சி அமைக்க தற்போது ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளின் மக்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். உலகின் பிற நாடுகளில் இருந்து இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் நம் நாடு பிரச்சினையில் சிக்கியபோது, எதிர்க்கட்சிகள் நெருக்கடியை அதிகரிக்கச் செய்தன.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டு பிரதமர் பதவியை பொறுப்பேற்றார். பின்னர் அவர் ஜனாதிபதி பதவியை ஏற்றார். அப்போது, பாராளுமன்றத்துக்கு சிலர் தீ வைக்க முயன்றனர். இது நாட்டின் ஸ்திரத்தன்மையை தடுக்கும்.

88/89 இல், ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பி பாடசாலைகள் மூடப்பட்டு பிள்ளைகள் தெருக்களில் இறங்கிய வரலாறு எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது.நாட்டை சரியான திசையில் திருப்புவதற்காக ஆசிரியர்களை எதிர்க்கட்சியினர் இன்று வீதிக்கு இறக்கியுள்ளனர். நாட்டில் குழந்தைகளுக்கு பால் மா இல்லை, மருத்துவமனைகளுக்கு மருந்துகள் இல்லை எனும்போது நாட்டுக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று சொன்னவர்கள் இவர்கள்தான். சுனில் ஹந்துன்நெத்தியும், டில்வின் சில்வாவும் வெளிநாடுகளில் உள்ள எமது மக்களுக்கு டொலர்களை நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என கூறினர். ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்தே இந்தக் குழுக்கள் நாட்டைக் கவிழ்க்க முயற்சிக்கின்றன. அவர்கள் இன்றும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மார்ச் 15, 2023 அன்று, ஜே.வி.பி மற்றும் ஐ.ம.ச யைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கினர். அந்த மாதம் 22 ஆம் திகதி, சர்வதேச நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, அந்த எதிர்ப்புகளும் வேலைநிறுத்தங்களும் நிறுத்தப்பட்டன. மக்கள் புதிய மூச்சுடன் எழுந்தால் தமக்கு கஷ்டம் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியும். எனவே, எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் பரப்பி நாட்டை வீழ்த்த முயற்சிக்கின்றன. இந்த நாட்டின் சாபக்கேடு நயவஞ்சக எதிர்க்கட்சி.

உலகின் பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழில்முனைவோர் பொருளாதார அடியார்கள் என்று அழைக்கப்படுபவர்கள்தான் தேசிய மக்கள் சக்தியினர். அதனால்தான் ஹதுன்நெத்தி ஈலோன் மஸ்க்கை பொருளாதார அடியாள் என்று அறிமுகப்படுத்தினார்.

இந்தக் குழு இந்த நாட்டை வரிசை யுகத்திற்கு மீண்டும் கொண்டு செல்ல விரும்புகிறது. நெருக்கடி நிலைமையில் அரசியல் விளையாடுவதை நிறுத்துவோம். நாங்கள் வளர்ந்த பொருளாதாரம் உள்ள நாட்டில் புதிய அரசியல் செய்வோம். அதற்காக எதிர்க்கட்சிகளையும் ஒன்று சேர அழைக்கிறேன்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்தார்.

நல்ல செய்தி கிடைக்கும் வேளையில் கோட்டையில் ரயில் நிலையம் முன்பு தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்து வருகிறது. இந்த மோதலின் மத்தியில், பிரான்சின் பரிஸ் கிளப் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது ஜே.வி.பி ஆர்ப்பாட்டங்கள் செய்து ஒருவரைக் கொலை செய்து உலகிற்கு வேறு ஒரு செய்தியைச் சொல்ல முயற்சித்தது. ஆனால் அந்த நிலைமைக்கு வராத காவல்துறைக்கு நன்றி கூறுகிறோம்.

ஜே.வி.பி.யின் போரின் இறுதி நேரத்தில் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகித்தார். அப்போது வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்குமானால் இந்த நாட்டில் இன்னும் யுத்தம் ஏற்பட்டிருக்கும். நாடு மீளப் போராடிக் கொண்டிருந்த ஒவ்வொரு தருணத்திலும் ஐ.ம.ச கபட அரசியலில் ஈடுபட்டு வந்தார்கள். பெயர் மாறினாலும் ஜே.வி.பியின் வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது.

இன்று, சுற்றுலாப் பயணிகளால் மட்டும் நம் நாடு கிட்டத்தட்ட 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கிறது. மத்திய வங்கி கையிருப்பில் 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் உள்ளது. இன்று நாட்டிற்கு எண்ணெய் கொண்டு வருவதற்காக மத்திய வங்கி 2196 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இப்போது நாடு ஸ்திரமாக உள்ளது. சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. நாடு முன்னோக்கி செல்லும் போது ஜே.வி.பி மற்றும் ஐ.ம.சக்தியின் அரச ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் ஆர்ப்பாட்டம் நடத்தும்போது சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருவார்களா?

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். சம்பள முரண்பாடு குறித்து ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். வரும் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளம் கண்டிப்பாக உயர்த்தப்படும்.

இந்த நாடு இரண்டு ஜனாதிபதிகளை கனவு காண்கிறது. அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச. அவர்களின் விசில் மட்டும் சக்தி வாய்ந்தது அல்ல. அவர்கள் அமைச்சரவைகளை உருவாக்குகிறார்கள், ஆனால் நாட்டை மீட்கும் பொருளாதார திட்டத்தைப் பற்றி பேசுவதில்லை. அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்காமல், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சம்பளத்தை இடைநிறுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர்.இது நடைபதை கதை. நாட்டில் 14 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றி ஜே.வி.பியின் கருத்தைச் சொல்லுங்கள்.

இன்று மக்கள் நாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் புதிய தொழில் துறைகளைத் தொடங்கியுள்ளார்கள். நாடு நம்பிக்கையான பாதையில் செல்லும் போது, இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான நாடு உருவாகும் போது, நாட்டை செயலிழக்கச் செய்யும் வகையில் செயல்படாதீர்கள். இந்த இக்கட்டான நேரத்தில், இரண்டு அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப அரச ஊழியர்கள் வீதியில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு நடந்தால் மீண்டும் உரிமையான நாட்டை இழக்க நேரிடும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு கூறினார்.

கேள்வி – மொட்டுக் கட்சியில் ஒரு வேட்பாளர் இருப்பதாக போஸ்ட்டர்களில் ஒட்டப்பட்டுள்ளது. இது என்ன?

மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்ற உறுப்பினர் – நான் மொட்டுக் கட்சியின் உறுப்பினர்.
மொட்டுக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன் வைப்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை. வெற்றி பெறும் வேட்பாளரைத் தான் மொட்டுக் கட்சி ஆதரிக்கும். போஸ்ட்டர்களினால் மொட்டுக் கட்சிக்கு தனியான அபேட்சகர் என்ற தகவல் வதந்தியாகும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026
    Editors Picks

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.