கிராம சேவையாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு (GNTUA) மூன்று நாட்களாக தமது கடமைகளில் இருந்து ஒதுங்கி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
தங்களின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கிராம சேவையாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.
மேலும் “எங்கள் கூட்டணி பல ஆண்டுகளாக இந்த பிரச்சினைகளை விவாதித்து வருகிறது, ஆனால் எங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்ந்து தாமதமாகின்றன” என்று அவர்கள் கூறினர்.
இதனையடுத்து நேற்று (26) முதல் மூன்று நாட்களுக்கு வேலையில் ஈடுபடாமல் இருக்க தீர்மானித்துள்ளதோடு வார இறுதி நாட்கள் மற்றும் சிறப்பு அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்வதில்லை என்றும், மேலும் எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு பதில் அளிக்காவிட்டால், மாவட்ட அளவில் போராட்டம் தொடரும் என்றும் கூட்டணி தெரிவித்துள்ளது.