எஹலியகொட உடுவாக பிரதேசத்தில் நேற்று (27) பிற்பகல் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக எஹலியகொட பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதியில் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், அப்பகுதியில் வசிக்கும் 48 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உடுவாக வித்யார்த்த வித்தியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக எஹலியகொட பிரதேச செயலாளர் எஸ்.ஏ. தில்ருக் கூறினார்.
குறித்த மண்சரிவின் காரணமாக அந்த பிரதேசத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள கெடஹெதி ஓயாவை அண்மித்த பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
