நேற்றைய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் ஆறு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
வாக்குமூலம் வழங்கியவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட டாட்டூ கடையின் உரிமையாளரும் அடங்குகிறார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், துபாயில் இருந்து டாட்டூ கடையின் உரிமையாளரின் கணக்கில் 1 மில்லியன் வைப்பிலிடப்பட்டிருப்பதாகவும், மேலும் இந்த பணம் கிளப் வசந்தாவின் கொலைக்கு உதவுவதற்காக வைப்பிலிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துபாயில் உள்ள தனது நண்பர்கள் டாட்டூ கடைக்கு பொருட்களை வாங்குவதற்காக இந்த பணத்தை அனுப்பியதாக உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த பணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பாதாள குழுவை சேர்ந்த கஞ்சிபான இம்ரான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து கிளப் வசந்தாவின் பையில் இருந்து ரிவால்வர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
