இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹைட்ஸ் கிராமத்தில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று (28) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளனர்.இத் தாக்குதலில் 10 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களே பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வான்வழித் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளதுடன் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இச் சம்பவத்துடன் இரு தரப்புக்கும் இடையிலான எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உலகத் தலைவர்கள் பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்ற நிலையில் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை ஹிஸ்புல்லா அமைப்பு மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
