சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
நியூசிலாந்து நெல்சனில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் முரளயட குசல் பெரேரா அதிகபட்சமாக 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சரித் அசலங்க ய 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி Henry,Jacob Duffy, Zakary Foulkes, Mitchell Santner, Daryl Mitchell ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர். இதன்படி நியூசிலாந்து அணிக்கு 219 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன் படி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 07 விக்கட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று 07 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது ,நியூசிலாந்து அணிசார்பில் ராச்சின் ரவிந்தரா அதிகபட்சமாக 69ஓட்டங்களைப் பெற்றார்,இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தமட்டில் அணித்தலைவர் அசலங்க மூன்று விக்கட்டுகளையும் ,வணிந்து ஹசரங்க இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்த ,நுவான் துஷார ,பினுர பிரண்டோ தலா ஒவ்வரு விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
