மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுஸ்சாகலை தோட்டத்தில் இலக்கம் 4ம் தொடர் குடியிருப்பில் தீ பரவியது.
குறித்த தீ பரவல் நேற்று இரவு 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
இத் தீ பரவலின் போது அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த ஏழு குடும்பத்தைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் தற்போது அதே தோட்டத்தில் உள்ள நூலகத்தில் தங்க வைத்து உள்ளனர் மஸ்கெலியா பொலிஸார்.
இந்த தீ பரவலின் போது தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்டநிரவாகம் மஸ்கெலியா பொலிஸார் இணைந்து தீ பரவலை கட்டு படுத்த நடவடிக்கை எடுத்து கட்டுபடுத்தினார்கள்.
இத் தீ பரவலின் போது உயிர் சேதங்கள் இல்லை தீ பரவியது பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் ஆண்கள் 7 பேர் பெண்கள் 15 பேர் பாடசாலை மாணவர்கள் 5 பேர் அடங்குவர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
