டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர் சிவனடிபாத மலைக்கு செல்லும் வழியில் தவறி விழுந்து உயிரிழந்.துள்ளார்.
ஊசி மலைப்பகுதியில் வைத்து குறித்த நபருக்கு உடலில் ஏற்பட்ட உபாதைகாரணமாக தவரி விழுந்து உள்ளார் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த நபரை ஊசி மலைப்பகுதியிலுள்ள பொலிசார் நல்லதண்ணி நகருக்கு தூக்கி வந்து அவசர அம்பூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் உயிரிழந்ததுள்ளார் என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரணித்தவர் 67 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சார்ந்த ஜெப்டீன் எனவும் இவரது உடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வைக்கபட்டுள்ளது என மேலும் கூறினார்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
