வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில், இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் கோபா என்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியிலிருந்து 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த வேலைத்திட்டம் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் கோபா குழுவில் ஆராயப்பட்டுள்ளது.
இவ்வாறு வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் நிதிச்சுத்திகரிப்பு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
