ரில்லாமுல்ல தோட்டம், மத்துரட்ட குரூப், கந்தப்பளையை சேர்ந்த கந்தசாமி யோகேஸ்வரனை காணவில்லை .
ரில்லாமுல்ல தோட்டம், மத்துரட்ட குரூப், கந்தப்பளை எனும் முகவரியை உடைய கந்தசாமி யோகேஸ்வரன் (உயரம் 6.2 உடி, பொது நிறம்,மெலிந்த உடல் அமைப்பு) என்பவரை கடந்த 28.02.2026 ஆம் திகதி முதல் எவ்வித தொடர்பு கொள்முடியவில்லை.
கொழும்பு கம்பாஹ பிரதேசத்தில் கட்டிட கட்டுமான பணியிடத்தில் வேலை செய்து 10.02.2026 ஆம் திகதி முதல் கொழும்பு கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் வேலை செய்வதாக உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.
மேலும் கடந்த 28.02.2026 ஆம் திகதி பொலிசார் தன்னை கைது செய்துள்ளதாகவும் காலை பொலிஸ் நிலையத்திலிருந்து வந்து விடுவதாகவும் வெளிநாட்டில் தொழில்புரியும் தனது மனைவிக்கு குரல்பதிவுe அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு இதுவரையில் அவரது தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியாதுள்ளது (நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது).
குடும்பத்தார் ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தினூடாகவும் தெரிந்த நண்பர்களுடாகவும் கொழும்பின் பல பொலிஸ் நிலையங்களை தொடர்பு கொண்டு விசாரித்தபோது எந்த பொலிஸ் நிலையத்திலும் அவ்வாறான நர் கைது செய்ப்பட வில்லையென தெரிவிக்கின்றனர்.
இவர் காணாமல் போய் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் நண்பர்கள் இவர் தொடபான தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைப்பேசி இலக்கங்களுக்கு உடனடியாக அறியத்தரவும்…
K.கிருஸ்ணகுமார் – 077 3028295, K.கேதீஸ்வரன் – 0771714185

