பசறை நிருபர்
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் கனகதேரன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் (08) இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் கலந்துகொண்டதோடு கெளரவ அதிதிகளாக கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் கே. திருலோகசங்கர், ஊவா மாகாண ஆளுநரின் இணைப்புச்செயலாளர் ஸ்ரீதரன் , பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் தியாகராஜா, பசறை பிரதேசசபை உப தவிசாளர் சி.நவராஜ் , கல்லூரியின் பழைய மாணவரும் பசறை பிரதேசசபை உறுப்பினருமான ஸ்டேன்லி கிஷான்ராஜ் , பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ். மகேந்திரன் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பின்னர் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் பெளதிகவள பிரச்னைகள் தொடர்பாக விசேட கந்துரையாடலும், கள ஆய்வும் இடம்பெற்றது.
