பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று (19) காலை பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.
அப்பகுதியில் நடமாடிய சந்தேகத்திற்கிடமான இருவரை பொலிஸார் சோதனையிட முற்பட்ட வேளையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் தற்போது களுபோவில (தெற்கு கொழும்பு போதனா) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
