சந்தேகநபர், ஜவுளி வர்த்தகர்களுக்குப் போலியான காசோலைகளை (Bounced cheques) வழங்கி, சுமார் 160 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகர்களைத் தவிர்த்து தலைமறைவாக இருந்த சந்தேகநபர், சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இருப்பதாக வர்த்தகர்களுக்கு இரகசியத் தகவல் சனிக்கிழமை (18) கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், வர்த்தகர்கள் சிறிகொத்தவிற்குச் சென்று குறித்த நபரை எதிர்கொண்டனர். அங்கு வர்த்தகர்களுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மிரிஹான பொலிஸார் தலையிட்டு அனைவரையும் கைது செய்தனர். மிரிஹான பொலிஸாரின் விசாரணைகளின் போது, வர்த்தகர்கள் முன்னாள் நகர சபை உறுப்பினருக்கு எதிராக உத்தியோகபூர்வ முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தனர். இதனையடுத்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் வத்தளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேகநபர் வத்தளை பதில் நீதவான் மெரில் போதேஜு முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 21-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
