போசாக்கு மாதத்தினை முன்னிட்டு சிறுவர்களின் மந்தபோஷணை மற்றும் பட்டினியை ஒழிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணி நிகழ்வு இன்று தலவாக்கலையில் சிறப்பாக இடம்பெற்றது.
வேர்ல்ட் விஷன் (World Vision) நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி இலங்கை வங்கி கிளை வரை சென்றடைந்தது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் ஆகியோருடன் முன்னாள் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் இதில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

