நுவரெலியாவில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவர் கைது
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில், இன்று மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 43 வயதுடைய சித்ரா தேவி என்ற பெண், அவரது கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர், தான் தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கஜரூபன் திவ்யா நுவரெலியா
