2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட கஷ்டப் பிரதேச பாடசாலையான பன்விலை மடுல்கலை க/வத்/சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி செந்தில்செல்வன் ஜனனி 140 புள்ளிகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சோலங்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த செந்தில்செல்வன் – மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வியான இவர், எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார். கடினமான சூழலையும் தாண்டிச் சாதனை படைத்த மாணவி ஜனனிக்கும், கல்விப் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட பாடசாலை அதிபர் எம். நவனீதன் மற்றும் வகுப்பாசிரியர் என். சுரேஷ்குமார் ஆகியோருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

