தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று (11) அதிகாலை இக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலின்போது, வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி 10 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த 55 வயதுடைய சிறுவர்களின் தந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
