செ. திவாகரன்
சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.
நோர்வூட் வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் பொலிஸாரால் தீவிரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நடவடிக்கை (16.09.2026) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் மூத்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் மண்டல ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று நோர்வூட் மற்றும்
NC தேயிலைத் தோட்டப் பகுதிகள் மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பிரதான நீர் ஆதாரமான கெசல்கமு ஓயாவை அண்மித்த போர்ட்ரீ (Portree) தோட்டப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தேயிலைச் செடிகளை அழித்து இந்த அகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு பெரும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது எனினும் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பியோடியுள்ளனர்.
அவர்கள் மறைத்து வைத்திருந்த மாணிக்கக் கற்களை அகழ்வதற்கும், சுத்தம் செய்வதற்கும் மற்றும் பிரித்தெடுப்பதற்கும் பயன்படுத்தும் 6 நீர் பம்பிகள் மற்றும் மாணிக்கக் கல் அகழ்வு பணிக்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ஹட்டன் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பேக்ஹோ இயந்திரங்களைப் பயன்படுத்தி முழுமையாக மூடப்பட்டிருந்த இந்தப் பகுதி, மீண்டும் இரவும் பகலில் கிட்டத்தட்ட 100 பேரை வேலைக்கு அமர்த்தி இந்த முறைகேட்டைச் செய்து வருவதாகவும், மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரையிலும் மீள மூடப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் எனினும், அகழ்வு பணிகளின் பின்னர் குறித்த தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தப்பி ஓடிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, காவல்துறை மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.
