இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’
கொழும்பில் நூல் அறிமுக விழா
மூத்த பத்திரிகையாளர் அமரர் பாரதி இராஜநாயகம் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு நூலான ‘இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ எனும் நூலின் அறிமுக விழா, மூத்த பத்திரிகையாளர் வி.தனபாலசிங்கம் தலைமையில் எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் பிற்பகல் 3.45 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மங்கள விளக்கேற்றலுடன், ஆதவன் அக்ஷரனின் தமிழ்வாழ்த்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
நிகழ்வில் கி. பொன்னுத்துரை வரவேற்புரையை நிகழ்த்துவர்.
இதனையடுத்து ‘இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ எனும் நூலை முன்வைத்து உரைகள் இடம்பெறும்.
மூத்த ஊடகவியலாளர், ஆய்வாளர் நிக்ஸன் ‘போருக்குப் பிந்திய தமிழர் அரசியல் பாதையும் பயணங்களும்’ எனும் தலைப்பிலும் ஆய்வாளர் எழுத்தாளர் சிராஜ் மஸுர் ‘போருக்குப் பிந்திய முஸ்லிம் அரசியல் தெரிவுகளும் தீர்மானங்களும்’ எனும் தலைப்பிலும் மூத்த பத்திரிகையாளர், விரிவுரையாளர் தேவ கௌரி, ‘பாரதி ராஜநாயகத்தின்; சமகால அரசியல் பத்திகள்’ எனும் தலைப்பிலும்
எழுத்தாளர் அரசியலாளர் மல்லியப்பு சந்தி திலகர் ‘ஈழப்போரும் மலையக அரசியலும்’ எனும் தலைப்பிலும் உரைகளை வழங்கவுள்ளார்.
பாரதி ராஜநாயகத்தின்; நண்பர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், ஏற்புரையினையும் நன்றியுரையினையும் நூல் தொகுப்பாசிரியர் கணபதி சர்வானந்தா நிகழ்த்துவார்.
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்

