மலையக கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கிடையேலான சிநேக பூர்வமான சந்திப்பு ஒன்று 19.03.2023 அன்றைய தினம் , கிரேன்ட் ஓரியண்ட் ஓட்டல் (Grant Orient Hotel) கொழும்பில் இடம்பெற்றது.
ACT அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான இரா. சத்தியசீலன் – (கனடா) அவர்களின் வழிகாட்டலில், ACT Sri Lanka அமைப்பின் பிரதிநிதிகளாக இரா.சிவயோகன் – உப.தலைவர்/ ஆலோசகர், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்.
செல்வி. ப.பவித்ரா – ஊடகத்துறை தலைமை பொருப்பாளர் ஆகியோரின் ஏற்பாடில் இடம்பெற்றதுடன், இந்த முக்கிய கலந்துரையாடலில் எம். வாமதேவன் – தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் மற்றும் மலையகம் தொடர்பான விவகாரங்களில் முன்னணி மூத்த செயற்பாட்டாளர், இரா. சடகோபன் – முன்னணி வழக்கறிஞர், நாவலாசிரியர் மற்றும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணை செயலாளர்,கோ.சேனாதிராஜா – முன்னணி சட்டத்தரணி, செயற்பாட்டாளர் மற்றும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணை செயலாளர்,சுலோச்சனா ராமையா மோகன் – துணை ஆசிரியர் சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், லீலா ராமையா – (ஓய்வு பெற்ற) செய்தி ஆசிரியர் லேக் ஹவுஸ் வெளியீடுகள்,நாகபூசனி கருப்பையா – மூத்த அறிவிப்பாளர் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் வசந்தம் தொலைக்காட்சி தொகுப்பாளர், இரா. காயத்ரி – இயக்குனர் RG சொலுசன்ஸ் பிரைவேட் லிமிடெட்,
நேத்ரா தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெ.ரொஷான் இறக்குமதி முகாமையாளர் வோகு டெக்ஸ் பிரைவேட் லிமிடெட், எம்.ஜேமன் – நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், ப.விதுர்ஷன் – ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொகுப்பாளர் “நேத்ரா டிவி” ,ஜோசப் பெர்னாடோ – நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
இலங்கை ஒளிப்பரப்பு கூட்டுத்தாபனம், கே. தனபாலசிங்கம் – Malayagm.lk இன் நிறுவனர் மற்றும் இயக்குனர், செய்தி ஆசிரியர், பவனீதா – திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் படைப்பாளி,ஆகியோரின் பங்கேற்புடன் மலையகத்தில் ACT Sri Lanka அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட்டவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாகவும் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
அத்தோடு மலையக மக்களுடைய கல்வி, கலை, கலாசாரம் மற்றும் மருத்துவம், தற்போதைய வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய விடயங்கள் சம்பந்தமாகவும் சிநேக பூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
