ஆசிரியர் சிகரம் பிலிப் இராமையா அவர்களின் 90 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 2023 / 03/ 25 ஆம் திகதி இராகலை உயர் தேசிய பாடசாலையில் அவரின் ஆசிரியர் சேவையை பாராட்டும் முகமாக சிறப்பு விழா இடம்பெற்றது .
நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீட்டர்போல் கலந்துகொண்டதோடு ,சிறப்பு அதிதியாக பேராசிரியர் தனராஜ் கண்ர்த்துக்கொண்டார்.
நிகழ்வுக்கான தலைமையை சட்டத்தரணி தாயுமானவன் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிப் இராமையா இராகலை உயர் தேசிய பாடசாலையிபாடசாலையின் முதலாவது பட்டதாரி என்பதுடன் மேலும் அதே பாடசாலையின் முதலாவது பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.நிகழ்வில் அவரின் நண்பர்கள் இணைந்து தொகுத்த சிகரம் பற்றிய சில சாரல் துளிகள் எனும் நூலும் வெளியிடப்பட்டது.






சரணியா ரவி
