வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம்- ஆராய்ச்சிக்கட்டு பங்கதெனியா, குசலை, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

அன்புருவாய், அருளுருவாய் காட்சிதரும் தாயே
அணைத்தெம்மை ஆட்சிகொள்ள வரவேண்டும் அம்மா
உன்னருளால் இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா

தேடிவந்து உன்னடியைச் சரணடைந்தோம் தாயே
தெளிவான மதிதந்து ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா
தொல்லையின்றி இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா

உயிரினங்கள் அனைத்திலுமே உள்ளுறையும் தாயே
உரிமையுடன் நாம்வாழ ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா
பகையின்றி இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா
பங்கமில்லா வாழ்வுக்கு வழிவகுக்கும் தாயே
பரிதவிப்பு இன்றி நாம் வாழ ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா
பஞ்சமின்றி இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா
வேப்பிலையில் குடியிருந்து நோய் தீர்க்கும் தாயே
வேற்றுமையின்றி நாம்வாழ ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா
ஒன்றுபட்டு இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா
நோய் நொடிகள் நெருங்காது காவல் செய்யும் தாயே
நொந்து மனம் துவழாமல் நாம் வாழ ஆட்சிகொள்ள வரவேண்டும் அம்மா
நேர்வழியில் இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
