Updated
பசறை கோணக்கலை லோவர் டிவிஷன் பகுதியில் தோட்ட தொழிலில் ஈடுபட்டிருந்த 11 பெண் தொழிலாளர்களும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருமாக மொத்தம் 12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பசறை கோணக்கலை லோவர் டிவிஷன் பகுதியில் தோட்ட தொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 11 பெண் தொழிலாளர்களும் வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் 07 பெண் தொழிலாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். 04 பெண் தொழிலாளர்களும் முச்சக்கர வண்டி சாரதியுமாக ஐவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமு தனராஜா
பசறை கோணக்கலை தோட்ட லோவர் டிவிசன் தோட்ட பெண் தொழிலாளர்கள் 10 உட்பட 11 பேர் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

இன்று ( 09) மு.ப 11.45 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் குளவி கூடொன்று கலைந்து தொழிலாளர்களை குளவிகள் சராசரியாக தாக்கியுள்ளன.

குளவிகொட்டுக்கு இலக்கான தொழிலாளர்களை காப்பாற்ற சென்ற இளைஞர் ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இவர்கள் தற்போது பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்
