ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம் பசறை 7ம் கட்டை, அக்கத்தன்னை அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில்

ஆறுபடை வீடு கொண்ட வேல்முருகா
ஆறுதலைத் தந்திடவே விரைந்துவா ஐயா
ஆதரித்து காத்தருள உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்
ஆறுமுகம் கொண்டவனே அழகனே வேல்முருகா
பரிதவிக்கும் நிலை அகற்ற விரைந்துவா ஐயா
பங்கமின்றி நாம் வாழ உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்
பார்வதியின் இளமகனாய் வந்துதித்த வேல்முருகா
இன்ப நிலை எமக்கருள விரைந்துவா ஐயா
இன்னலின்றி நாம்வாழ உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்
சிவனார்க்கு உபதேசம் செய்தவனே வேல்முருகா
சிந்தையினைச் சீர்செய்ய விரைந்துவா ஐயா
சீர்மையுடன் நாம் வாழ உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்
சரவணப் பொய்கையிலே வந்துதித்த வேல்முருகா
சங்கடங்கள் போக்கி எமக்கருள விரைந்துவா ஐயா
சிந்தையிலே நிறைந்திருந்து சிறப்புடனே நாம் வாழ உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்
மலையகத்தின் உயர் நிலத்தில் வந்துறையும் வேல்முருகா
மதிநிறைந்த நல்வாழ்வை எமக்கருள விரைந்துவா ஐயா
நிலை தளரா நிம்மதியைப் பெற்று நாம் வாழ உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
