வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, கரப்பன்காடு, அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்

வன்னித் தமிழ் மண்ணில் இருந்தருளும் விநாயகரே
வற்றாத உன்கருணை எமை ஆள வேண்டுமைய்யா
வெற்றியுடன் நாம் வாழ என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே

ஆறுதல் தந்தெம்மை அரவணைக்கும் விநாயகரே
ஆதரித்து அருளளித்து எமை ஆள வேண்டுமைய்யா
நிம்மதியை நாம் பெறவே என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே

மருத நிலச் சூழலிலே வந்துறையும் விநாயகரே
மதிமயங்கா வாழ்வு தந்து எமை ஆள வேண்டுமைய்யா
மாண்புடனே நாம் வாழ என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே
எங்கும் எதிலும் இருந்தருளும் விநாயகரே
ஒன்றுபட்ட வாழ்வு தந்து எமை ஆள வேண்டுமைய்யா
ஓரணியில் நாம் வாழ என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே
ஏற்றமிகு வாழ்வு தந்து உயர்த்தி விடும் விநாயகரே
எழுச்சி மிக்க வாழ்வு தந்து எமை ஆள வேண்டுமைய்யா
எதிர்கால நம்பிக்கையுடன் நாம் வாழ என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே
துணிவு தந்து வழிகாட்டி உடனுறையும் விநாயகரே
துன்பமில்லா வாழ்வு தந்து எமை ஆளவேண்டுமைய்யா
தொல்லையில்லா வாழ்வைப் பெற்று நாம் வாழ என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
